வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

மனித மனம் ஒரு வெங்காயம் !!





astrobalu1954@gmail.com




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 


அனைவருக்கும் இனிமைகள் நிறைந்த 

காலை வணக்கங்கள்.


இன்றுமுதல் நான் ஒரு புதிய வலைத்தளம் 

மூலமாக உங்கள் அனைவரையும் நான் 

          " மனதில் மறைந்தவை " 


என்ற பெயரில் எழுத ஆரம்பித்துள்ளேன்.


       மனித மனம் ஒரு வெங்காயம் !!



இறைவனால் இப்புவியில் படைக்கப்பட்ட 

இனங்களுள் மிகவும் உயர்வான ஆறறிவு 

உள்ள ஒரே இனம்தான் மனித இனம்.அந்த 

மனித மனத்தின் மனம் ( மூளை) என்பது 

இன்றுவரை ஒரு புரியாத புதிராகவேதான் 

உள்ளது என்பது ஆன்றோரும் அறிவில் சிறந்த 

சான்றோர்களும் ஒப்புக்கொண்டுள்ள ஒரு 

மறைக்க முடியாத, மறுக்க முடியாதஉண்மையே 

ஆகும்.

எப்படி வெங்காயத்தை உரிக்க உரிக்க அதனுள் 

எதுவுமே இருக்காதோ, அது போலவே பல்வேறு 

நினைவுகளால் நிறைந்துள்ள மனித மனமும் 

திறக்க திறக்க, எதுவுமே இல்லாத ஒரு காலி 

இடமாகவே காணப்படுவதுதான் நமது மனித 

இனத்தின் சிறப்பு. 

(எத்தனை கணிப்பொறிகள் வந்தாலும் அந்த 


இயந்திரம் என்பது மனிதனின் மூளைக்கு 


இணையாகவும் ஆகாது அதுபோல ஈடாகவும் 


ஈடாகாது என்பதுதான் உண்மை.)



இத்தனை சிறப்புகளைத் தன்னகத்தே 


கொண்டுள்ள மனித மூளையை ( மனத்தை) யார் 


ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள்ளாக அடக்கி 


வைத்துள்ளாரோ, அவரே எல்லோரிலும் 


சிறந்தவர். 


மனிதனின் தினசரி பழக்க வழக்கங்களை தனது 


கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள மனித 


மூளையை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் 

கொள்வது என்பது மிக மிகக் கடினம்.

அதனைச் செய்து முடிப்பவரே மனிதர்கள் 


எல்லோரும் போற்றிடும் உத்தமர் ஆவார்.

அவரை வாழ்த்தி இந்த முதல் கட்டுரையை நான் 


இங்கே நிறைவு செய்கிறேன்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன்.


திருமலை. இரா. பாலு.