என் மனதிற்குள்ளாக புதைந்த கருத்துக்கள் !!
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ............அன்றே சொன்னார் ஔவையார் !!
பாடலைப் பார்ப்போமா வாசகர்களே !!
பின் குறிப்பு :- நான் இப்போது தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் மேகங்களுக்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே தானும் அவர் (ஜெ) அணிந்துள்ளது
வியாழன், 29 டிசம்பர், 2016
சிரிப்புத்தான் வருகுதையா !! அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர் தேர்வு பார்க்கின்றபோது !!பாகம் எண்.2. ( தொடர்ச்சி)!!
சிரிப்புத்தான் வருகுதையா !!
அஇஅதிமுக வின் பொதுச்செயலாளர்
தேர்வு பார்க்கின்ற போது !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய காலை
வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
ஒருவழியாக நேற்றையதினம் சென்னையில்
கூடிய ஆளும் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
தங்கள் கட்சிக்கு மறைந்த ஜெயலலிதாவிற்கு
பிறகு ஒரு புதியதோர் பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அது அவர்களது கட்சியின் உள்விவகாரம் என்பது உண்மை !! மறுக்க முடியாத உண்மை !! என்று சொன்னாலும் அதில் அந்தக்கட்சியின்அடிமட்டத் தொண்டர்களது ஆழமான மனதில் இருக்கும் உண்மையான, விசுவாசமான கருத்துக்களுக்கு, அவர்களின் சுதந்திரமான எண்ணங்களுக்கு உரிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுஇருக்கிறாரா? என்ற கேள்விக்கு ஒரு தமிழக அரசியல் ஆர்வலர் என்கின்ற முறையில் என்னால்
இல்லை !! என்கின்ற பதிலைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
ஏனென்று கேட்டால், அந்தக் கட்சி, அதை ஒரு சராசரி தகுதி வாய்ந்த அரசியல் கட்சி என்று அழைக்கவே என் மனம் மறுக்கின்றது இது முதல் விஷயம்.
இரண்டாவது, தான் ( மறைந்த MGR ) ஜப்பான் நாட்டில் உலகம் சுற்றிய வாலிபன் படம் எடுத்தபோது அங்கே அவர் அந்நியச்செலாவணி மோசடியில் ஈடுபட்டு, அதனை அதன் புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்து மறைந்த
இந்திராகாந்தியிடம் தெரிவித்து, அதைவைத்து திமுக வை பலவீனப்படுத்த வேண்டும் அதை உடைக்க வேண்டும், தனக்கு ஜால்ரா அடிக்க தமிழகத்தில் ஒரு இயக்கம் வேண்டும் என்று ஒரே எண்ணத்தில்,துரோகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சிதான் மறைந்த MGR தொடங்கியஅஇஅதிமுகஎன்பதுநம்மில் இக்கால இளைஞர்கள் பலர் தெரிந்திருக்க வாய்ப்பு
இல்லை என்பதால் அதனை மீண்டும் இங்கே நான் திவு செய்கிறேன்.
அப்படி துரோகத்தால் உருவாகிய கட்சி 1976 தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்
அதாவது 1989 வரை இங்கே ஆட்சி செய்து சாதித்தது என்ன என்று கேட்டால், ஒரு மண்ணும் இல்லை, புரட்டுத்தலைவரின் அடிவருடிகள் ஏராளமான நபர்களுக்கு அரசின்புறம்போக்கு நிலங்களை பட்டா நிலங்கள் என்று பெயர் மாற்றி அதனை அந்த அடிவருடிகளுக்கு
( மறைந்த ஜேப்பியார்,ஐசரிவேலன்,ACசண்முகம்
இதுபோன்ற இன்னும் ஏராளமான பலர்) தாரை வார்த்துக்கொடுத்து அவர்கள் அந்த நிலங்களில் இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கி மக்கள் பணத்தை கல்வியின் பெயரால் சுரண்டி அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதைத்தவிர வேறு எந்த நலத்திட்டங்களும் இந்த MGRஇன் 13 ஆண்டுகால
ஆட்சியில் இந்தத்தமிழகம் கண்டுள்ளதா ? என்றால் அதற்கும் இல்லை என்ற பதில்தான்.
சரி. அவரும் மறைந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்து ஜானகி அணி என்றும் ஜெயலலிதா அணி என்றும் இருகூறுகளாக பிளவு பட்டு பிறகு ஜானகி அணி சிதைந்து போய் அதன் பிறகு அது ஜெயால் கவர்ந்து இழுக்கப்பட்டு கபளீகரம்செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் இந்த ஜெ யால்பராமரிக்கப்பட்டு, அதன்பிறகு 1991-1996 என்று 5ஆண்டுகள் ஜெ ஆளுகைக்கு தமிழ்நாடு ஆட்பட்ட போது என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.
எல்லாமே பணம் பண்ணுகின்ற வேலைதான் அங்கே மறைந்த ஜெயால் நடத்தப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் மூல ஆதாரமே அந்தக் காலகட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை இந்த நாடே அறியும். அதன்
பிறகு ............
( தொடரும்)
பாகம் எண் :2. ( தொடர்ச்சி)
அதன் பிறகு 1996-2001 மீண்டும் இங்கே தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன.
அரசியலில் மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது பல
செய்கின்றதோ அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு
வராது. இதுதான் தமிழகத்தின் தலைஎழுத்து.
தி.மு.க. என்ன இதற்கு விதிவிலக்கா என்ன !!
2001-2006 நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் இங்கே மறைந்த ஜெயாவின் தலைமையில் ஆட்சி மாற்றம். ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அரங்கேற்றம் ஆனது. இதைத்தெரிந்தும்தெரியாதது போல ஜெயலலிதா மவுனம். எல்லாமே வசூல் வேட்டைதான். ஜெயலலிதாவிடம் பணம்
குவியத்தொடங்கிய காலம் அது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் சேரத்தொடங்கியது. பணம் மொய்த்ததோ !! மதம் பிடித்ததோ !! இது அந்தக்கால தமிழ் பழமொழி. யாரையும் எவரையும் தன்னிடம் இருக்கும் பணத்தில் விலைக்கு வாங்கிடலாம் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்ட காலமிது. சசிகலா
தனது உள்மனதில் தனக்கும் இதுபோல ஆளும் காலம் வந்துவிடாதா ? என்ற ஆசை முளைவிட்ட காலமும் இதுவே. ஆனால் இதற்கு இன்னும் பலகாலம் தான் பொறுத்து இருந்தே ஆக வேண்டும் என்று நினைத்தார் உயிர்த்தோழி சசிகலா. பகையாளியின் குடியை உறவாடிக் கெடுத்திடு !! இதுதான் சசிகலாவின் உள்மனதில் உருவான ஒரே கருத்தும் எண்ணமும். ஆனால் அதனை நிறைவேற்றிடஅவர் 2௦௦6 ஆண்டில் தாம் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருந்து அதனை தாமே நிறைவேற்றிட போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. அதுதான் இறைவனின் ஆணை. அது எப்படி நிறைவேறியது ?
அடுத்த தொடரில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம்.
அன்புடன். மதுரை. TR.பாலு.
லேபிள்கள்:
அரசியல்,
உங்களது பார்வைக்கு,
கட்டுரை
செவ்வாய், 6 டிசம்பர், 2016
சமரசம் உலாவும் இடம் எது ? கவிஞர் மருதகாசியின் படைப்பினில்.......இதோ...உங்களுக்காக....
சமரசம் உலாவும் இடம் எது ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள் உரித்தாகுக.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அது 1952ம் ஆண்டு. கல்பனா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கருப்பு-வெள்ளை திரைக்காவியம்தான்
ரம்பையின் காதல்
இதில் மறைந்த குணச்சித்திர நடிகை பானுமதி,
சிரிப்பு நடிகர் KA.தங்கவேலு, வில்லன் நடிகர்
MN நம்பியார், TS பாலையா,SA அசோகன் மற்றும்
MN இராஜம் ஆகியோர் நடித்தது.படத்தில் இடம்பெற்ற பாடல்களை மறைந்த கவிஞர்கள்குலத்திலகங்கள் A.மருதகாசி, தஞ்சை ராமதாஸ் இருவரும்இயற்றிட, வெற்றி
இசைஇயக்குனர்TR.பாப்பாஇசையில்வெளிவந்த
மாபெரும் வெற்றிக் காவியம்தான் அது.
அதில், வாழ்க்கையின் உண்மை நிலையை, மனித வாழ்வின் இறுதி வடிவத்தை, சுடுகாட்டு மயானத்தில் கதாநாயகன் சோகத்தோடு அமர்ந்திருக்க, ஒரு சிவனடியார்பாடுவது போன்ற காட்சி. இது மனித வாழ்வின் உண்மை வடிவத்தை புடம்போட்டு, தோல்
உரித்துக்காட்டிடும் வகையில் பாடல் ஒன்று இடம் பெற்றது. கவிஞர் A.மருதகாசி இயற்றிய சிறப்புப் பாடல் அது. தற்போது உள்ள சூழலுக்கு இந்தப்பாடல் மிகமிகநன்றாகவேபொருந்துகிறது
இப்போது நாம் பாடலைப் பார்ப்போமா நேயர்களே !!
https://www.youtube.com/watch?v=ATBNyaWxTr4
மேல்குறித்த வலைதள முகவரியைத் தனியாக
அச்சிட்டு க்ளிக் செய்தால், அந்தப்பாடலை நீங்கள் முழுவதுமாக ஒலி.ஒளிக்காட்சியில் கண்டு மகிழ்ந்திடலாம்.வெண்கலக்குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த சீர்காழி S. கோவிந்த ராஜனின் மறக்க முடியாத காவியப்பாடல் அது.
பாடல் இதோ :-
சமரசம்...உலாவும்..இடமே.... !!
நம் வாழ்வில் காணா !!...
சமரசம்...உலாவும்..இடமே...!!
( சமரசம்)
ஜாதியில் மேலோர் என்றும் !!
தாழ்ந்தவர் கீழோர் என்றும் !!
பேதமில்லாது..எல்லோரும் முடிவில் !!
சேர்ந்திடும் காடு...தொல்லை இன்றியே !!
தூங்கிடும் வீடு...உலகினிலே இதுதான் !!
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் !!
இடமே !!...
( சமரசம்)
ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ?
அறிஞன் எங்கே ? அசடனும் எங்கே ?
ஆவிபோனபின் கூடுவார் இங்கே !!
ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !! ....
( சமரசம்)
சேவை செய்யும் தியாகி !!
ஸ்ருங்கார போகி !!
ஈசன் பொற்பாதம் தன்னை !!
நாடிடும் யோகி !! எல்லோரும் !!
இங்கே ஒன்றாய்உறங்குவதாலே !!
உண்மையிலே இதுதான் நம் !!
வாழ்வில் காணா !!
சமரசம் உலாவும் இடமே !!
( சமரசம்)
இன்றைய தினம் தமிழக முதல்வர்
இறுதி சடங்கு நடைபெறுகின்ற இந்த
நேரத்தில், இந்தப் பாடல் எனது நினைவலையில் எழுந்ததால், நான் இந்தப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
ஆழ்ந்த வருத்தத்துடன் !!
மதுரை. TR.பாலு.
வியாழன், 1 டிசம்பர், 2016
சன் தொலைக்காட்சி நிறுவனநிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!
சன் தொலைகாட்சி நிறுவன
நிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
கடந்த சட்டமன்றத்தேர்தல் 2016 மே மாதம்
நடைபெறுவதற்கு முன்பாக, சுமார் 6 மாத
காலங்களுக்கு முன்பாக வரையிலும் நடிகர்
விஜயகாந்த்துடன் ஒருவேளை தேர்தல்
உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நப்பாசையின்
அடிப்படையில், சன் தொலைகாட்சி, மற்றும்
அதன் அனைத்து கிளை தொலைகாட்சி
நிறுவனங்களில், அவரது திரைப்படங்கள் எந்தவித தங்கு தடையுமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. தப்பே இல்லை. இதே காரணத்திற்காகவே நடிகர் சரத்குமார் நடித்த படங்களும் ஒளிபரப்பப் பட்டு வந்தது. ஆனால், நம்மிடம் (திமுகவிடம்)ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதாக, இந்த இரு
நடிகர்களும் நாடகமாடி, அதனை தங்களுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆளும் கட்சியோடு, அரசியல் புரோக்கர் கலிங்கப்பட்டி துரோகி மூலம் அதிக தொகை வாங்குவதற்காகவே செயல்பட்டனர்
என்பது நமக்கு பின்னாளில் தெரியவந்தது.
எப்படி என்றால், மதுரை கருப்பன் மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணியில் இணைந்ததும், அதுபோலவே நடிகர் ஜாதிக்கட்சி சொந்தக்காரர் சரத்குமார், ஆளும்கட்சியோடு மானம் மரியாதை இழந்து கூட்டு வைத்துக்கொண்டதன் மூலம் வெளிப்பட்டு, அவரவர்கள் செய்த துரோகத்திற்கு
பலன் கிடைத்ததன் வாயிலாக, ( எப்படி பலன் கிடைத்தது ?அதுவரை மதுரை கருப்பன் நடிகர் விஜயகாந்த் கட்சி பெற்றிருந்த கட்சி அங்கீகாரம், மற்றும் தேர்தல் சின்னம் காப்புரிமை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு இருந்தது, குறைந்த சதவிகிதம் ஒட்டு கூட வாங்கிட
முடியாத காரணத்தால் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழந்ததன் மூலமாக, கட்சிக்கு கிடைத்திருந்த அங்கீகாரம்
மற்றும் தேர்தல் சின்ன உரிமை,ஆகியவைகளை
இழந்து அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர்) மக்களின் பேராதரவை இழந்து தமிழ்நாட்டு அரசியலிலிருந்தே அவர்கள் இருவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட சூழ்நிலையில்,
மீண்டும் அவர்கள் இருவருக்கும் அதாவது செத்துப்போன பாம்புக்கு பால் ஊற்றி உயிர் வர வழைத்திடும் வண்ணம் ஏன்,எதற்காக, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் நடித்த
படங்களை விடாமல், ஓயாமல்,ஒழியாமல், படங்களை சன் TV மற்றும் சன் லைப் டிவி ஆகியவை வெளியிட்ட வண்ணம் இருப்பதன் காரணம் என்ன ?
திமுகவை கழுத்தறுத்த இவர்கள் படங்களை அங்கே தொலைக்காட்சியில் காட்டுவதுதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் அவரால் அரும்பாடுபட்டு காப்பாற்றப்பட்டு, தமிழனுக்கு,தமிழ் இனத்துக்கு,தமிழ் மொழிக்கு பாடுபடும் ஒரே அரசியல் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காட்டப்படும்
விசுவாசமா ? இல்லை முத்தமிழ் அறிஞரின் அன்புக்கு பாத்திரராக இருந்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முரசொலி என்ற வார்த்தையை தனது பெயருக்கு அடைமொழியாக வைத்து திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை வளர்ப்பது ஒன்றே தனது தலையாய களப்பணி மற்றும்
உயிர்மூச்சு என்று கருதி இறுதிவரை வாழ்ந்து மறைந்த முரசொலி மாறனுக்கு காட்டுகின்ற நன்றிக்கடனா ?
தயவு செய்து பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள
திரு. கலாநிதி மாறன் அவர்களையும் திரு தயாநிதி மாறன் அவர்களையும் இந்தக் கட்டுரையின் வாயிலாக கேள்வி கேட்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தக் கட்டுரை அவர்கள் இருவரின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ நான் அறிந்திலேன். ஆனால் தயவுசெய்து
இனியாகிலும் அந்த அரசியலில்இரண்டு செல்லாக்காசாகிப்போன நடிகர்களின் படங்களை தொலைக்காட்சியில் திரையிடாமல்
இருந்து நமது இயக்கத்துக்கு பெருமை சேர்த்துத்தர வேணுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR.பாலு.
திங்கள், 21 நவம்பர், 2016
அடிமேல அடி வைச்சா அம்மிக்கல்லும் தானாக நகரும் !!
அம்மிக்கல்லும் தானாக நகருமா ? எப்படி ? அது இப்படி !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த
காலை வணக்கங்கள் உரியதாக ஆகட்டும்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அம்மிக்கல்லும் தானாக நகருமா ? அது எப்படி ?
அது இப்படி !!
இதுதான் அன்பர்களே !! இன்றைய நமது
வலைத்தளமான " என் மனதிற்குள் புதைந்த
கருத்துக்கள் " பகுதியில் நான் வெளியிட
இருக்கும் கட்டுரையின் தலைப்பு.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, இங்கே
சென்னை S.R.M. பல்கலைக்கழகத்தின் நிறுவனர்
தலைவர் ( Founder President ) பொறுப்பு வகிக்கும்
ஆளும் கட்சிக்கு மிக,மிக நெருக்கமானவரும்
மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும்
உண்மை,நேர்மை,சத்தியம்,ஊழல் இவைகளை
எல்லாம் ஒழித்து, கருப்பு பணத்தை இந்த
நாட்டைவிட்டே விரட்டி அழித்திடும் வரையில்
தாம் ஊண்,உறக்கம்,நீர் கூட பருகிட மறுத்து
விஸ்வாமித்திர முனிவர் பாணியில் இங்கே
விரதம் எடுத்து வாழ்ந்துவருகின்ற நமது
அருமைக்கும் பெருமைக்கும் உரிய இந்தியத்
தலைமை அமைச்சர் ( Prime Minister of India )
மரியாதைக்கு உரிய திரு. நரேந்திர மோடியின்
அரசியல் பங்குதாரரும், இந்த 2016 ம் ஆண்டு
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு அதன் மூலமாக 51 தொகுதிகளை பெற்று,அந்தஅத்தனை51தொகுதி---யிலும் ஆளும் அண்ணா திமுக வேட்பாளரின் வெற்றிக்கு அரும்பாடு பட்டவரும், பொறுப்புகள் எதுவுமில்லாமல், இங்கே அப்போலோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் அம்மையாரின்
அன்புக்கும் ஆதரவிற்கும் ரொம்ப,ரொம்பவே
நெருக்கமானவரும் , வேண்டப்பட்டவருமான திருவாளர்.பச்சமுத்துவின் ( ஏங்க, ஒரு பக்கா கிரிமினல், பொது மக்களை ஏமாற்றி, அவர்களின் புதல்வர்/புதல்விகட்கு தான் நடத்திவருகின்ற SRM மருத்துவ கல்லூரியில்
இடம்தருகிறேன் என்று சொல்லி பலநூறு கோடிகள்பணத்தை கொள்ளையடித்த ஒரு ஆளுக்கு இம்புட்டு பில்டப்பா என்று நீங்கள் நினைப்பது எனக்கும் இங்கே புரிகிறது) பகல்கொள்ளைக்கு கூட்டாளியாக பணி
புரிந்தவரும் வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட
நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.மதன்
தமிழக காவல்துறையின் மிக நீண்ட தேடுதல்
வேட்டைக்கு பிறகு நேற்று திருப்பூர் நகரில் அங்கே அவரது காதலி வர்ஷாவின் வீட்டில் வைத்து " லபக் "என்று காவலர்கள் பிடித்தார்கள் என்ற செய்தியை இங்கே தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனக்கு வந்த சிரிப்பை அடக்க நீண்ட நேரம் ஆனது அன்பர்களே.
ஒரு குற்றவாளியை, அவன் தவறு செய்தவன் என்று காவல்துறை முடிவேடுக்குமே ஆனால் அவனை ஒரே நாளில் பிடித்து சட்டத்தின் முன்பாக, நீதிமன்றத்தில் நிறுத்தும் வல்லமை பெற்றிருந்த நமது தமிழக காவல்துறை, ஆளும்கட்சியின் ஏவல்துறையாகமாறியதன் விளைவு !! இந்த பக்காகிரிமினல்பச்சமுத்துவின்
அந்தரங்ககூட்டாளிமதனை ஆறுமாதகால அவகாசத்திற்குப் பிறகு பிடித்திருக்கிறது என்று
சொன்னால், இதற்குப்பின்புலம் என்னென்ன இங்கே நடைபெற்றிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
இந்த பகல் கொள்ளைக்காரன் பச்சமுத்து, ஆளும் கட்சியின் கூட்டாளி அது மத்திய அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது மாநில அரசாங்கமாக இருக்கட்டும் ( பொதுவாக அன்பர்களே, இவன் போன்ற கொள்ளையர்கள், தாங்கள் அடிக்கும் கொள்ளையில், கணிசமான ஒரு பகுதியை ஆளும் அரசாங்கத்திற்கும் அந்தக்கட்சிக்கும் தாராளமாக தந்தால்தான் இவன் தொழில் இங்கே சரியாக நடக்கும் என்பது இந்தப் பச்சமுத்து போன்ற வழித்தோன்றல்கள் ஏற்கனவே கண்டுபிடித்து செயல் படுத்திய முறைதான்-அதே பாணியைத்தான் இங்கே திருவாளர் பச்சமுத்துவும் கையாண்டிருக்கிறார்)
ஆகவே, அவ்வளவு விரைவில் இவன் பிடிபட காவல்துறை அனுமதிக்காது. கொள்ளைக்காரன் பச்சமுத்துவின் அந்தரங்க உதவியாளர் மதன் தாயார் சென்னை உயர்நீதி மன்றத்தில், ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்து அதனை
ஆளும்தரப்பில்வந்தஅத்தனைமிரட்டல்களை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் உயிர்
பயமுறுத்தல்களையும் துச்சமாக மதித்து, தொடர்ந்து வழக்கை நடத்தியதால் மட்டுமே இந்த மதன் இங்கே பிடிபட்டுள்ளார் என்பது உண்மை. ஆறுமாதமா ஒரு கிரிமினல் குற்றவாளியை பிடிப்பதற்கு ? அதுவும்கூட
உயர்நீதிமன்றம் வருகின்ற 29ம் தேதிக்குள்ளாக தமிழக காவல்துறை மதனை பிடிக்கவில்லை என்று சொன்னால்,தாங்கள் வழக்கை C.B.I. (Central Bureau of Investigation ) என்ற மத்திய அரசாங்கத்தின் காவல்துறை வசம் ஒப்படைத்து
விசாரிக்க நேரிடும் என்று இறுதி எச்சரிக்கை கொடுத்து ,அதன்பிறகே கொள்ளைக்காரன் பச்சமுத்துவின் அந்தரங்க செயலாளர் மதன் பிடிபட்டுள்ளார் என்று சொன்னால்,எந்த அளவிற்கு இங்கே மாநில அரசாங்கமும் சரி அதன் ஏவல்களுக்கு அடிபணிந்து நடக்கும் காவல்துறையாக இருக்கட்டும், எப்படி இந்த பச்சமுத்துவிற்கு அடிபணிந்து ஒத்துழைப்பு நல்கியுள்ளார்கள் என்பதை சிந்தித்துப்
பாருங்கள் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
எங்கே வழக்கு CBI வசம் போய்விட்டால், நம்முடைய அத்தனை வண்டவாளங்களும் தண்டவாளத்தில் இங்கே ஏற்றப்பட்டுவிடுமே, என்று அதற்குப் பயந்துதான் நேற்று
மதன் பிடிபட்டுள்ளாறே தவிர வேறு எதுவும் இல்லை.
அதனால்தான் நான் இந்த கட்டுரைக்கு :-
அடிமேல அடி வைச்சா அம்மிக்கல்லும் தானாக நகரும் !!அது எப்படி ? அது இப்படி !!
என்று தலைப்பு கொடுத்து பதிவு செய்துள்ளேன் என்று சொல்லி, இன்றைய பொழுது எனது அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த நல்ல பொழுதாக அமைந்திட வேண்டும் என்று வாழ்த்தி உங்களிடம் இருந்து இந்த அளவில் விடை பெறுகின்றேன் எனதன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R.பாலு.
திங்கள், 1 ஆகஸ்ட், 2016
தாயாலே வந்தது !! தீயாலே வெந்தது !!
தாயாலே வந்தது !!
தீயாலே வெந்தது !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை
வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
நேற்றையதினம் புதுடெல்லி மாநிலங்கள்
அவையில், வீசிய பெரும்புயலைப் பற்றி
என் மனதிற்குள் உதித்த எண்ணங்களை
உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
திருமதி. சசிகலா புஷ்பா என்ற அண்ணா திமுக
மாநிலங்களவை உறுப்பினர், தனக்கு நேர்ந்த
உண்மைச் சம்பவங்களை, கண்ணீருடன்
கரகரத்த குரலுடன் பேசியதைக் கண்டால்,
கல்மனதும் கரைந்திடும். எந்த அளவிற்கு
அவர், கட்சித்தலைமையால் பாதிக்கப்பட்டு,
வேதனைக்குள்ளாகியிருந்தால், இதுபோல
பொது இடத்தில் தன்னுடைய வேதனைகளை
சொல்லியிருப்பார் என்பது சிந்திக்க வேண்டிய
விஷயம்தான்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இறைவனால்
படைக்கப்பட்ட இந்த உலகில், எதனால் எது
உருவாகிறதோ, அதனால் அது அழிக்கப்படுகிறது
என்பதே உண்மை.
அது போல, திருமதி சசிகலா என்ற ஒருவரால்,
( ஜெ.யின் தோழி) எப்படி அண்ணா திமுக என்ற
இயக்கம் இயக்கப்பட்டு இன்றளவும் வழிநடத்தி
செல்லப்படுகிறதோ, அதே பெயருடைய மற்றும்
ஒருவரால் ( திருமதி.சசிகலா புஷ்பா) அஇஅதிமுக அழிவுப்பாதை நோக்கி செல்கிறது என்பதே உண்மை.அதனாலேயே இந்த நேரத்தில், இந்தக்கட்டுரையை எழுதிட முற்பட்டேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
திங்கள், 13 ஜூன், 2016
வெற்றி பெற்றது மதுவின் அரசாட்சி !! தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!
வெற்றிபெற்றதுமதுவின்அரசாட்சி !!
தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிமை நிறைந்த காலை
வணக்கங்கள்.
நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து தேர்தல்
முடிவுகள் பற்றிய கருத்துக்கணிப்புக்கள், அது
தேர்தலுக்கு முந்தியதாக இருந்தாலும் சரி,
அல்லது பிந்தியதாக இருந்தாலும் சரி, எல்லா
கணிப்புக்களும் என்ன சொன்னது என்றால்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி அனேக
இடங்களைக் கைப்பற்றும் அதுவேஆட்சியையும்
பிடிக்கும் என்றே மக்களுக்கு தகவல் தந்தது.
ஆனால், முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியில்
வந்த வேளையில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போனதாகவே நடந்தது. இது ஏன்,எப்படி நடந்தது, என்பதை அரசியல் ரீதியாக நாம் அலசி ஆராயந்திடத்தான் இந்த கட்டுரை உங்களுக்குத் தரப்படுகின்றது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
திராவிட முன்னேற்றக்கழகம் இந்த தேர்தலில்
தோல்வியைத் தழுவியதற்கு, நான் சொல்லும்
முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த
கட்சி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும்
போடுகின்ற முதல் கையெழுத்து எதற்கு என்று
கேட்டால், தமிழகத்தில் " முழு மது விலக்கு "
என்ற கோப்பில்தான், என்று மேடைக்கு மேடை
தளபதி திரு. மு.க. ஸ்டாலின் முழங்கியதுதான்
என்பதே எனது கணிப்பு அன்பர்களே.
தமிழ்நாட்டில், முதன்முதலாக, 1971 ம் ஆண்டு
மது விலக்கு தளர்த்தி தாராளமாகமதுவிற்பனை
செய்திடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.அதன்
பிறகு அதன் கொடுமை, ஏழை மக்கள் தங்களது
வருமானம்அனைத்தையும்வீட்டுசெலவுகளுக்கு
தராமல், குடித்தே காலி செய்கின்றனர் என்ற விபரம் அறிந்த அரசாங்கம் மீண்டும் 1974ம் ஆண்டு முதல் முழுமதுவிலக்கு அமல் செய்திடப்பட்டது.
அதன் பிறகு, தி.மு.க. வை உடைத்து, தனியாக
அண்ணா தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி
ஆட்சியைப் பிடித்த மறைந்த நடிகர் MGR இங்கே
மீண்டும் 1980 ம் ஆண்டு வாக்கில் மது விற்பனை
செய்திட அனுமதித்தார் என்பது வரலாறு.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக, குடித்துக்குடித்துப் பழக்கப்பட்ட ஒருவன் (அப்போது அவன் வயது சுமார் 20 என்று வைத்துக்கொள்வோம். இன்று அவனது வயது 56. ஆக இன்று 15 வயது பையன் முதல் 56 வயது வரை குடிகாரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்)
திமுக மீண்டும்இங்கே ஆட்சிக்கு வந்தால் இங்கே இனிமேல் மது விற்பனை தடை செய்யப்பட்டு விடும் என்ற நிலைமையை உணர்ந்த அந்தக் குடிகாரர்கள் சமுதாயம் தங்களது வாக்குகளை கட்சி பேதம் இல்லாமல், ஆளும் அஇஅதிமுக வுக்கு வாக்களித்தார்கள். அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.இதுதான் உண்மை.
அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் யாரும் மக்களுக்கு நல்லது செய்திடும்வகையில் தேர்தல் அறிக்கையில்திட்டங்களை அறிவித்தால், அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை இந்தத் தேர்தல் மிகத்தெளிவாக
படம் பிடித்துக் காட்டி விட்டது என்பதே உண்மை.
ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில்
வெற்றிபெற்றதுமதுவின் அரசாட்சி !!
தோற்று நின்றது மனிதவள மனசாட்சி !!
என்று சொல்லி எனது கட்டுரையை நான் நிறைவுசெய்கிறேன்அன்புத்தமிழ்நெஞ்சங்களே!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)