ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

கடைசியில் அனைத்துக் கழிசடைகளும் ஒன்றாக இணைந்துள்ளன !!






கழிசடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த ஆண்டின் இறுதி மாதம் சென்னையில் 
நாற்றத்தை மட்டுமே வழங்கிக்கொண்டிருந்த கூவம் ஆற்றில், பல இடங்களில் இருந்து வந்த அனைத்துக்கழிசடைகளும் ஒன்றிணைந்து சங்கமம் ஆவதை நாம் பார்த்திருந்தோம்.           

(இந்த இடத்தில் நீங்கள் நடைபெற உள்ள தமிழக தேர்தல் களத்தில் மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் ஒன்று இணைந்ததைமனதில்எண்ணிக்கொண்டால் அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல )                                             

அப்போது பலகாலமாக நாம் கண்டிராத வகையில் பெய்த கடுமையான மழை வெள்ளத்தில்அந்தக்கூவத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துக் கழிசடைகளும் காணமல் போய் கூவம் ஆறே படு சுத்தமாக காட்சி அளித்ததையும் நாம் கண்டு மகிழ்ந்தோம்.                                                 

(இந்த இடத்தில், எதிர்வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அந்த ம.ந.கெடுக்கும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்களதுவைப்புத்தொகைதனை பறிகொடுத்து வரலாறு காணாத தோல்வியை சந்தித்து காணாமல் போய் விடுவர் என்று நேயர்களாகிய நீங்கள் நினைத்துக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல )           

பொதுவாக நமது முன்னோர்கள் சொல்வார்கள், எதிர்காலத்தில் எது நடக்க உள்ளதோ, அது சிற்சில சம்பவங்கள் மூலமாக இயற்கை நமக்கு முன்கூட்டியே உணர்த்திவிடும் என்று.                       அதுதான் அன்பர்களே இப்போது நமது குடுகுடுப்பைக்காரன் துரோகி கோபாலு தலைமையில் ஏற்பட்டுள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக்கட்சிகளும் தேர்தல் முடிந்தவுடன் அந்தக்கையோடு காணமல் அநேகமாக அந்தமான் தீவு சென்று அங்கேயே குடியேறிடும் என அடித்து ஆணித்தரமாக கூறிடக் கடமைப் பட்டு உள்ளேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!


ஆதரிப்போம் உதயசூரியன் சின்னத்தை !!                  


நன்றி !! வணக்கம் !!                                                               


அன்புடன். மதுரை. TR. பாலு.