தாயாலே வந்தது !!
தீயாலே வெந்தது !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை
வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
நேற்றையதினம் புதுடெல்லி மாநிலங்கள்
அவையில், வீசிய பெரும்புயலைப் பற்றி
என் மனதிற்குள் உதித்த எண்ணங்களை
உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
திருமதி. சசிகலா புஷ்பா என்ற அண்ணா திமுக
மாநிலங்களவை உறுப்பினர், தனக்கு நேர்ந்த
உண்மைச் சம்பவங்களை, கண்ணீருடன்
கரகரத்த குரலுடன் பேசியதைக் கண்டால்,
கல்மனதும் கரைந்திடும். எந்த அளவிற்கு
அவர், கட்சித்தலைமையால் பாதிக்கப்பட்டு,
வேதனைக்குள்ளாகியிருந்தால், இதுபோல
பொது இடத்தில் தன்னுடைய வேதனைகளை
சொல்லியிருப்பார் என்பது சிந்திக்க வேண்டிய
விஷயம்தான்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இறைவனால்
படைக்கப்பட்ட இந்த உலகில், எதனால் எது
உருவாகிறதோ, அதனால் அது அழிக்கப்படுகிறது
என்பதே உண்மை.
அது போல, திருமதி சசிகலா என்ற ஒருவரால்,
( ஜெ.யின் தோழி) எப்படி அண்ணா திமுக என்ற
இயக்கம் இயக்கப்பட்டு இன்றளவும் வழிநடத்தி
செல்லப்படுகிறதோ, அதே பெயருடைய மற்றும்
ஒருவரால் ( திருமதி.சசிகலா புஷ்பா) அஇஅதிமுக அழிவுப்பாதை நோக்கி செல்கிறது என்பதே உண்மை.அதனாலேயே இந்த நேரத்தில், இந்தக்கட்டுரையை எழுதிட முற்பட்டேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.