பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே !!
அன்புள்ள உலகம் முழுவதும் வாழ்ந்து
வருகின்றதமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனிவருக்கும் எனது இனிமை நிறைந்த,
நெஞ்சம் நிறைந்த மேதின நல்வாழ்த்துக்கள்.
இன்றையதினம் ஒரு புதிய வலைதளத்தினில்
" என் மனதிற்குள்ளாக புதைந்த கருத்துக்கள் "
என்னும் தலைப்பினில் உங்கள்
அனைவருக்குமாக எழுதிட முடிவெடுத்து
ஆரம்பிக்கிறேன்.
இன்-ஷா-அல்லாஹ்
இவைகள் அனைத்துமே எனது தனிப்பட்ட
கருத்துக்கள்.யாரையும் புண்படுத்தாத
எண்ணங்களின் வெளிப்பாடுகள்.
இனிமேல் புதைந்த கருத்துக்கள் வெளியில் வர
தன்னைத்தயார் செய்து புறப்படுகிறது.
கருத்து எண் :- 1.
இறைவனால் படைக்கப்பட்ட மனிதகுலத்தில்
இரு பிரிவாக ஆண் மற்றும் பெண் என
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாக இங்கே
வலம்வந்து வாழ்ந்தும், மறைந்தும் மீண்டும்
பிறந்தும் பின் இறந்தும் வந்து கொண்டிருக்கிறது.
இதில் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒரு கருத்து
பெரியோர்கள் என்று சொல்லப்படும்
வயோதிகர்களால் உதட்டளவிலே
உச்சரிக்கப்படுவதை நாம் கண்கூடாக பார்த்து
வருகிறோம்.
அப்படி உபதேசிக்கும் அந்தப் பெரியவரின்
உள்மனத்தை நாம் சற்றே கூறுபோட்டு
பார்த்தோமேயானால் அங்கே ஒரு நமீதாவோ
அல்லது நக்மாவோ, சில்க் ஸ்மிதாவோ
ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பதைஅனைவரும்
நாம் காணலாம். எனவே இந்த ஒருவனுக்கு
ஒருத்தி என்பதெல்லாம் சுத்தப் பொய்.
இதனை நாம் யாரும் நம்பி எமார்ந்துவிட
வேண்டாம் என்று அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல ஒரு பெண்ணின் உள்ளம் என்பது
கடலை விடவும் ஆழமானது.
வானத்தை விடவும் நீளமானது.
இதைத்தான் கவிஞர் ஒருவர் தனது பாடலில்
என்ன சொல்லியிருக்கிறார் என்றால் :-
ஆறு அது ஆழமில்ல !!-அது
சேரும் கடலும் ஆழமில்ல !!
ஆழம் எது ஐயா !!
அந்தப் பொம்பள மனசுதான்யா !!
என்று மிக அற்புதமாக படம்பிடித்துக்
காட்டியிருக்கிறார்.
எனது கருத்து எண்:- 2.
நான் எந்த ஆண்மகனைப் பார்த்தாலும் பேச்சு
போக்கில் குழந்தைகள் பற்றிப் பேசிடும்
போதெல்லாம் நான் அவருக்கு எத்தனை
குழந்தைகள் என்று எப்போதுமே
கேட்பது இல்லை. அதற்கு மாறாக உங்கள்
மனைவிக்கு எத்தனை குழந்தைகள் என்றே
கேட்பதுதான் எனது வழக்கம்.
ஏன் என்றால் இவருக்கு
குழந்தைகள் யார் யார் அப்பன் பெயரைச்
சொல்லிக்கொண்டு, அவர்கள் எந்தெந்த
ஊரில்,எந்தெந்த வீட்டினில் வளர்ந்து
வருகின்றனறோ !! இறைவனும் அந்தக்
குழந்தைகளின் தாயும் மட்டுமே அறிவார்கள்.
ஆனால் அதே சமயம், அவரது மனைவிக்கு
அவள் இவர் உட்பட யாருக்கு பிள்ளைகளைப்
பெற்றிருந்தாலும் அது எல்லாம் இவரது
குழந்தைகளே
( எல்லோரும் இப்படி இல்லை.
இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு )
எவண்டா புத்தன் இங்கே !!
எவன்டா சுத்தம் இங்கே !!
விளக்கை அணைச்சுப்புட்டா !!
எவன்டா இராமன் இங்கே !!
என்று காவியக் கவிஞர் வாலியின் பாடல்தான்
எனது நினைவின்பால் வருகின்றது என்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
மீண்டும் பல்வேறு புதிய கருத்துக்களுடன்
சிந்தனைகளுடன் சந்திக்கிறேன்.
அதுவரையில் நன்றிகூறி விடைபெறுகின்றேன்.
வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
( மதுரை TR.பாலு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக