பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
உலகம் முழுவதும் அன்புடனும் நல்ல தூய
தமிழ்ப் பண்புடனும் வாழ்ந்து வருகின்ற என்
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இந்த இனிய காலை
வேளையில் எனது உள்ளங்கவர்ந்த, அன்பு
நிறைந்த, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க
கடமைப்பட்டுள்ளேன். நிற்க !!
இன்றையதினம் இந்தோனேசியாவில் உள்ள
பாலித்தீவிற்கு பாலியல் சுகம் காண வந்திருந்த
சோட்டா இராஜன் அங்கே இன்டர்போல் என்னும்
தர்ம தேவதையின் பிடியில்சிக்கிசின்னாபின்னம்
ஆகி ( இந்திய நாணய மதிப்பில் 5,௦௦௦ கோடிக்கு
மேலாக ஆஸ்தி பாஸ்திகளைத் தன்னகத்தே
கொண்ட ( இதுதவிர சிங்கப்பூரில் ஏகப்பட்டதங்க
நகைக்கடைகள் வேறு ) அந்தப் பெருமகனார்,
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்.
இறுதியில் தர்மமே வெல்லும் எனும்
தாரகத் திருமந்திரத்தின் அடிப்படையில்
கைகளில் விலங்கிடப்பட்டுஇன்றோ,நாளையோ
அல்லது இன்னும் சில தினங்களிலோ இந்தியா
அழைத்துவரப்படப் போகிறார் என்கின்ற
நெஞ்சம் இனித்திடும் சேதி கேட்டுத் துள்ளித்
திரிகின்ற நம்முடைய அதே நெஞ்சம் கேட்கின்ற
கேள்விதான் இன்றையதினம் இங்கே
கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு
உள்ளது என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
ஆம். உண்மைதான். இன்று சோட்டா இராஜன்
பிடிபட்டுவிட்டார். அனால் இந்தத் தமிழகம்
அதில் வாழும் அத்தனை மக்களாலும் இதய
வெறி கொண்டு அழைக்கப்படும் படா இராணி
அம்மையார் அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் ?
என்பது ஒன்றே நமது இதயங்களைத் துளைத்து
கொண்டிருக்கும் ஒரே கேள்வி. மதிப்பிற்குரிய
எனது அன்புத் தந்தைஅடிக்கடிஒருவிஷயத்தைப்
பற்றிச்சொல்லிக்கொண்டே இருப்பார்கள் :-
சிலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்.
பலரைப் பலகாலம் ஏமாற்றலாம்.
ஆனால்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.
என்று. அதுபோல விரைவில் அவரும் பிடிபட்டு
சிறைச்சாலையின் கம்பிகளை எண்ணப்போகும்
நாள் வெகு தொலைவினில்இல்லை.அன்றுதான்
நம்மில் அனைவருக்கும் உண்மையானதீபாவளி
என்று சொல்லி உங்கள் அனைவரிடமும் அன்பு
வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக