வியாழன், 12 மே, 2016

தமிழக வாக்காளப் பெருமக்களே !! பொறுத்தது போதும் !! பொங்கி எழுந்திடுவீர் !!






பொறுத்தது போதும் !! பொங்கி எழுந்திடுவீர் !!



எல்லாப் புகழும் இறைவனுக்கே !!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

அது 1955 ம் ஆண்டு. முத்தமிழ் அறிஞர் 
தலைவர் கலைஞர் அவர்களின் கை 
வண்ணத்தில், வசனத்தில், தமிழ்த் 
திரை உலகையே புரட்டிப்போட்ட ஒரு 
சுனாமி திரைப்படம்தான் " மனோகரா ".

அதில் இறுதிக்காட்சியில், மனோகரனின் 
(சிவாஜி கணேசன்) தாயார் ஆந்திர நடிகை 
கண்ணாம்பாள், தனது புதல்வனுக்கு அங்கே 
இராஜசபையில், நடைபெறுகின்ற அநியாயம்,
அக்கிரமங்களை எதிர்த்து போராடுகின்ற 
உத்திரவு ஒன்றினை வழங்குகின்ற விதமாக 
சொல்லிய வாசகம்தான் அன்பர்களே இன்று 
நமது கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு 
உள்ளது. அதுதான் :-

பொறுத்தது போதும் !!பொங்கி எழு !!
அதை நான் இன்றைய தினம் தமிழக வாக்காளப் 
பெருமக்களுக்கு மீண்டும் நினைவு படுத்திடக் 
கடமைப்பட்டு உள்ளேன்.

கடந்த 2011 ம் ஆண்டு முதல் நடப்பு 2016 ம் ஆண்டு 
வரையிலான5ஆண்டுகளாகஇங்கேதமிழகத்தில் நடைபெற்று வருகின்ற அல்லி ராணியின்காட்டு 
தர்பார் ஆட்சிக்கு நல்லதொரு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் தலைவர் கலைஞர்அவர்களின் நல்ல ஆட்சி மலர்ந்திட, நீங்கள் அனைவரும் தி.மு.க. மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே உங்களது பொன்னான வாக்குகளை அளித்து  தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட ஆவன செய்திடுங்கள்என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு நன்றி கூறி 
விடைபெறுகின்றேன்.

வணக்கம்.

அன்புடன். மதுரை T.R. பாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக