திங்கள், 21 நவம்பர், 2016

அடிமேல அடி வைச்சா அம்மிக்கல்லும் தானாக நகரும் !!




அம்மிக்கல்லும் தானாக நகருமா ? எப்படி ?   அது இப்படி !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த 
காலை வணக்கங்கள் உரியதாக ஆகட்டும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அம்மிக்கல்லும் தானாக நகருமா ? அது எப்படி ?
அது இப்படி !!

இதுதான் அன்பர்களே !! இன்றைய நமது 
வலைத்தளமான " என் மனதிற்குள் புதைந்த 
கருத்துக்கள் " பகுதியில் நான் வெளியிட 
இருக்கும் கட்டுரையின் தலைப்பு.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, இங்கே 
சென்னை S.R.M. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் 
தலைவர் ( Founder President ) பொறுப்பு வகிக்கும் 
ஆளும் கட்சிக்கு மிக,மிக நெருக்கமானவரும் 
மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் 
உண்மை,நேர்மை,சத்தியம்,ஊழல் இவைகளை 
எல்லாம் ஒழித்து, கருப்பு பணத்தை இந்த 
நாட்டைவிட்டே விரட்டி அழித்திடும் வரையில் 
தாம் ஊண்,உறக்கம்,நீர் கூட பருகிட மறுத்து 
விஸ்வாமித்திர முனிவர் பாணியில் இங்கே 
விரதம் எடுத்து வாழ்ந்துவருகின்ற நமது 
அருமைக்கும் பெருமைக்கும் உரிய இந்தியத் 
தலைமை அமைச்சர் ( Prime  Minister of  India )
மரியாதைக்கு உரிய திரு. நரேந்திர மோடியின் 
அரசியல் பங்குதாரரும், இந்த 2016 ம் ஆண்டு 
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு அதன் மூலமாக 51 தொகுதிகளை பெற்று,அந்தஅத்தனை51தொகுதி---யிலும் ஆளும் அண்ணா திமுக வேட்பாளரின் வெற்றிக்கு அரும்பாடு பட்டவரும், பொறுப்புகள் எதுவுமில்லாமல், இங்கே அப்போலோ மருத்துவமனையில், சிகிச்சைக்காக 
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் அம்மையாரின் 
அன்புக்கும் ஆதரவிற்கும் ரொம்ப,ரொம்பவே 
நெருக்கமானவரும் , வேண்டப்பட்டவருமான திருவாளர்.பச்சமுத்துவின் ( ஏங்க, ஒரு பக்கா கிரிமினல், பொது மக்களை ஏமாற்றி, அவர்களின் புதல்வர்/புதல்விகட்கு தான் நடத்திவருகின்ற SRM மருத்துவ கல்லூரியில் 
இடம்தருகிறேன் என்று சொல்லி பலநூறு கோடிகள்பணத்தை கொள்ளையடித்த ஒரு ஆளுக்கு இம்புட்டு பில்டப்பா என்று நீங்கள் நினைப்பது எனக்கும் இங்கே புரிகிறது) பகல்கொள்ளைக்கு கூட்டாளியாக பணி
புரிந்தவரும் வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட 
நிறுவனத்தின் உரிமையாளருமான திரு.மதன் 
தமிழக காவல்துறையின் மிக நீண்ட தேடுதல் 
வேட்டைக்கு பிறகு நேற்று திருப்பூர் நகரில் அங்கே அவரது காதலி வர்ஷாவின் வீட்டில் வைத்து " லபக் "என்று காவலர்கள் பிடித்தார்கள் என்ற செய்தியை இங்கே தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனக்கு வந்த சிரிப்பை அடக்க நீண்ட நேரம் ஆனது அன்பர்களே.

ஒரு குற்றவாளியை, அவன் தவறு செய்தவன் என்று காவல்துறை முடிவேடுக்குமே ஆனால் அவனை ஒரே நாளில் பிடித்து சட்டத்தின் முன்பாக, நீதிமன்றத்தில் நிறுத்தும் வல்லமை பெற்றிருந்த நமது தமிழக காவல்துறை, ஆளும்கட்சியின் ஏவல்துறையாகமாறியதன் விளைவு !! இந்த பக்காகிரிமினல்பச்சமுத்துவின் 
அந்தரங்ககூட்டாளிமதனை ஆறுமாதகால அவகாசத்திற்குப் பிறகு பிடித்திருக்கிறது என்று 
சொன்னால், இதற்குப்பின்புலம் என்னென்ன இங்கே நடைபெற்றிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இந்த பகல் கொள்ளைக்காரன் பச்சமுத்து, ஆளும் கட்சியின் கூட்டாளி அது மத்திய அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது மாநில அரசாங்கமாக இருக்கட்டும் ( பொதுவாக அன்பர்களே, இவன் போன்ற கொள்ளையர்கள், தாங்கள் அடிக்கும் கொள்ளையில், கணிசமான ஒரு பகுதியை ஆளும் அரசாங்கத்திற்கும் அந்தக்கட்சிக்கும் தாராளமாக தந்தால்தான் இவன் தொழில் இங்கே சரியாக நடக்கும் என்பது இந்தப் பச்சமுத்து போன்ற வழித்தோன்றல்கள் ஏற்கனவே கண்டுபிடித்து செயல் படுத்திய முறைதான்-அதே பாணியைத்தான் இங்கே திருவாளர் பச்சமுத்துவும் கையாண்டிருக்கிறார்) 
ஆகவே, அவ்வளவு விரைவில் இவன் பிடிபட காவல்துறை அனுமதிக்காது. கொள்ளைக்காரன் பச்சமுத்துவின் அந்தரங்க உதவியாளர் மதன் தாயார் சென்னை உயர்நீதி மன்றத்தில், ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்து அதனை 
ஆளும்தரப்பில்வந்தஅத்தனைமிரட்டல்களை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் உயிர் 
பயமுறுத்தல்களையும் துச்சமாக மதித்து, தொடர்ந்து வழக்கை நடத்தியதால் மட்டுமே இந்த மதன் இங்கே பிடிபட்டுள்ளார் என்பது உண்மை. ஆறுமாதமா ஒரு கிரிமினல் குற்றவாளியை பிடிப்பதற்கு ? அதுவும்கூட 
உயர்நீதிமன்றம் வருகின்ற 29ம் தேதிக்குள்ளாக தமிழக காவல்துறை மதனை பிடிக்கவில்லை என்று சொன்னால்,தாங்கள் வழக்கை C.B.I. (Central Bureau of Investigation ) என்ற மத்திய அரசாங்கத்தின் காவல்துறை வசம் ஒப்படைத்து 
விசாரிக்க நேரிடும் என்று இறுதி எச்சரிக்கை கொடுத்து ,அதன்பிறகே கொள்ளைக்காரன் பச்சமுத்துவின் அந்தரங்க செயலாளர் மதன் பிடிபட்டுள்ளார் என்று சொன்னால்,எந்த அளவிற்கு இங்கே மாநில அரசாங்கமும் சரி அதன் ஏவல்களுக்கு அடிபணிந்து நடக்கும் காவல்துறையாக இருக்கட்டும், எப்படி இந்த பச்சமுத்துவிற்கு அடிபணிந்து ஒத்துழைப்பு நல்கியுள்ளார்கள் என்பதை சிந்தித்துப் 
பாருங்கள் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

எங்கே வழக்கு CBI வசம் போய்விட்டால், நம்முடைய அத்தனை வண்டவாளங்களும் தண்டவாளத்தில் இங்கே ஏற்றப்பட்டுவிடுமே, என்று அதற்குப் பயந்துதான் நேற்று 
மதன் பிடிபட்டுள்ளாறே தவிர வேறு எதுவும் இல்லை.

அதனால்தான் நான் இந்த கட்டுரைக்கு :-

அடிமேல அடி வைச்சா அம்மிக்கல்லும் தானாக நகரும் !!அது எப்படி ? அது இப்படி !!
என்று தலைப்பு கொடுத்து பதிவு செய்துள்ளேன் என்று சொல்லி, இன்றைய பொழுது எனது அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த நல்ல பொழுதாக அமைந்திட வேண்டும் என்று வாழ்த்தி உங்களிடம் இருந்து இந்த அளவில் விடை பெறுகின்றேன் எனதன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக