வியாழன், 1 டிசம்பர், 2016

சன் தொலைக்காட்சி நிறுவனநிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!




சன் தொலைகாட்சி நிறுவன
நிர்வாக இயக்குனரின் கனிவான கவனத்திற்கு !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த சட்டமன்றத்தேர்தல் 2016 மே மாதம் 
நடைபெறுவதற்கு முன்பாக, சுமார் 6 மாத 
காலங்களுக்கு முன்பாக வரையிலும் நடிகர் 
விஜயகாந்த்துடன் ஒருவேளை தேர்தல் 
உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நப்பாசையின் 
அடிப்படையில், சன் தொலைகாட்சி, மற்றும் 
அதன் அனைத்து கிளை தொலைகாட்சி 
நிறுவனங்களில், அவரது திரைப்படங்கள் எந்தவித தங்கு தடையுமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. தப்பே இல்லை. இதே காரணத்திற்காகவே நடிகர் சரத்குமார் நடித்த படங்களும் ஒளிபரப்பப் பட்டு வந்தது.  ஆனால், நம்மிடம் (திமுகவிடம்)ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதாக, இந்த இரு 
நடிகர்களும் நாடகமாடி, அதனை தங்களுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆளும் கட்சியோடு, அரசியல் புரோக்கர் கலிங்கப்பட்டி துரோகி மூலம் அதிக தொகை வாங்குவதற்காகவே செயல்பட்டனர் 
என்பது நமக்கு பின்னாளில் தெரியவந்தது. 

எப்படி என்றால், மதுரை கருப்பன் மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணியில் இணைந்ததும், அதுபோலவே நடிகர் ஜாதிக்கட்சி சொந்தக்காரர் சரத்குமார், ஆளும்கட்சியோடு மானம் மரியாதை இழந்து கூட்டு வைத்துக்கொண்டதன் மூலம் வெளிப்பட்டு, அவரவர்கள் செய்த துரோகத்திற்கு 
பலன் கிடைத்ததன் வாயிலாக, ( எப்படி பலன் கிடைத்தது ?அதுவரை மதுரை கருப்பன் நடிகர் விஜயகாந்த் கட்சி பெற்றிருந்த கட்சி அங்கீகாரம், மற்றும் தேர்தல் சின்னம் காப்புரிமை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு இருந்தது, குறைந்த சதவிகிதம் ஒட்டு கூட வாங்கிட 
முடியாத காரணத்தால் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழந்ததன் மூலமாக, கட்சிக்கு கிடைத்திருந்த அங்கீகாரம் 
மற்றும் தேர்தல் சின்ன உரிமை,ஆகியவைகளை 
இழந்து அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர்) மக்களின் பேராதரவை இழந்து தமிழ்நாட்டு அரசியலிலிருந்தே அவர்கள் இருவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட சூழ்நிலையில், 
மீண்டும் அவர்கள் இருவருக்கும் அதாவது செத்துப்போன பாம்புக்கு பால் ஊற்றி உயிர் வர வழைத்திடும் வண்ணம் ஏன்,எதற்காக, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் நடித்த 
படங்களை விடாமல், ஓயாமல்,ஒழியாமல், படங்களை சன் TV மற்றும் சன் லைப் டிவி ஆகியவை வெளியிட்ட வண்ணம் இருப்பதன் காரணம் என்ன ?

திமுகவை கழுத்தறுத்த இவர்கள் படங்களை அங்கே தொலைக்காட்சியில் காட்டுவதுதான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கும் அவரால் அரும்பாடுபட்டு காப்பாற்றப்பட்டு, தமிழனுக்கு,தமிழ் இனத்துக்கு,தமிழ் மொழிக்கு பாடுபடும் ஒரே அரசியல் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காட்டப்படும் 
விசுவாசமா ? இல்லை முத்தமிழ் அறிஞரின் அன்புக்கு பாத்திரராக இருந்து மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முரசொலி என்ற வார்த்தையை  தனது பெயருக்கு அடைமொழியாக வைத்து திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை வளர்ப்பது ஒன்றே தனது தலையாய களப்பணி மற்றும் 
உயிர்மூச்சு என்று கருதி இறுதிவரை வாழ்ந்து மறைந்த முரசொலி மாறனுக்கு காட்டுகின்ற நன்றிக்கடனா ?

தயவு செய்து பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள 
திரு. கலாநிதி மாறன் அவர்களையும் திரு தயாநிதி மாறன் அவர்களையும் இந்தக் கட்டுரையின் வாயிலாக கேள்வி கேட்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தக் கட்டுரை அவர்கள் இருவரின் கவனத்திற்கு வருகிறதோ இல்லையோ நான் அறிந்திலேன். ஆனால் தயவுசெய்து
இனியாகிலும் அந்த அரசியலில்இரண்டு செல்லாக்காசாகிப்போன நடிகர்களின் படங்களை தொலைக்காட்சியில் திரையிடாமல் 
இருந்து நமது இயக்கத்துக்கு பெருமை சேர்த்துத்தர வேணுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக