கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !! சங்கு சுட்டாலும் வெண்மை தரும் !!
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும்
என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும்
என் இனிய காலை வணக்கம்.
உலக தட்பவெப்ப நிலையை இங்கே தற்போது
வெகுவாக பாதித்துக்கொண்டிருக்கும் எல்-
நினோ எனும் நிலையால் கடந்த நவம்பர்
மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில்
மழை வானத்தைபொத்துக்கொண்டு கொட்டோ
கொட்டென்று கொட்டித் தீர்த்த நிகழ்வுகள்
உலகம் அறிந்ததே.
ஆனால், இதே போல் ஒரு நிலை இங்கிலாந்து
நாட்டில் சில பல இடங்களிலும் நடைபெற
உள்ளது என்பதனை நாம் அப்போது
அறிந்திருக்கவில்லை. லண்டன் மாநகரம்
மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு
நகரங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுஅதனால்
அங்குள்ள தெருக்கள் மற்றும் வீடுகள் இவற்றின்
உள்ளும் நீர் புகுந்து அங்கே வாழ்ந்திடும் மக்கள்
பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளான
சம்பவங்கள் நாம் தொலைக்காட்சியின்
வாயிலாக தெரிந்து கொள்கின்றோம்.
ஆனாலும் நமது பல பிறவிகள் பெற்ற
புண்ணியத்தின் பயனாக கடந்த 2011 ம் ஆண்டு
இங்கே தமிழகத்தின் முதல்வராக பதவிப்
பொறுப்புஏற்றுக்கொண்டபுண்ணியவதி அம்மை
யார் ஜெயலலிதாவைப்போல அல்லாமல்,
( அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிலே
சென்று அங்கே கடும் துன்பத்திலும்,
துயரத்திலும் ஆழ்ந்திருக்கும் மக்களை கண்டு
ஆறுதல்கூட சொல்லாமல் பதவி என்னும்
நாற்காலியில் செருக்கோடும் ஆணவத்தோடும்
அமர்ந்துள்ளஅம்மையார் ஜெயலலிதாவைப்
போல இன்றி ) அந்த நாட்டின் பிரதமர் திரு
டேவிட் காமரூன் அவர்கள், மழைக்கால
காலணியை அணிந்து கொண்டு அங்கு
வாழ்கின்ற அனைத்து மக்களையும்
நேரிலே சென்று சந்தித்து, அவர்தம்துயரங்களில்
தாமும் பங்கு கொண்டு, அவர்களது கண்களில்
கசிந்துகொண்டு இருக்கும் கண்ணீரைத்
துடைக்கும் விதமாக பலகோடி ஸ்டெர்லிங்
பவுண்டுகளை ( அந்த நாட்டு நாணயம்) வெள்ள
நிவாரணநிதியாக, உடனடியாக, பாதிக்கப்பட்ட
மக்களுக்கு வழங்கி அத்துடன் நில்லாமல்,
அங்கே வெள்ளநிவாரணப் பணிகளில்
தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு
செயல் பட்டுவரும் பணியாளர்களைகைகுலுக்கி
பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்தியும்சென்ற
காட்சியினை நான் இங்கே தொலைக்காட்சியில்
பார்க்கின்றபோது எனது கண்கள் குளமாகியதை
நான் இங்கே அவசியம் குறிப்பிட்டே ஆக
வேண்டும்.
இங்கிலாந்துநாட்டுமக்கள்செய்தபுண்ணியத்தில்
நூறில் ஒரு பங்குகூட இங்கே நமது தாழ்ந்த
தமிழகத்தில் வாழ்ந்து வரும் நாம் செய்திட
வில்லையேஎன்பதனைஎண்ணிப் பார்க்கின்ற
போது நமக்கு வருவது என்னவோ வேதனை
கலந்த பெருமூச்சும், வென்நீரைப்ப்போன்ற
கண்ணீரும்தான்.
இதனால்தான்அக்காலத்தில்நம்முன்னோர்கள்
சொல்லிச்சென்ற ஒரு பழமொழியினை நான்
இங்கே நினைவு படுத்தி அதையே இந்தக்
கட்டுரையின் தலைப்பாக வடித்து அதனை
உங்களிடம் பதிவு செய்வதில் எனக்கு மிக்க
மகிழ்ச்சியே.
அந்தப் பழமொழி இதோ, மீண்டும் உங்கள்
கவனத்திற்கு :-
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!-சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக